4 நாட்களுக்கு சதுரகிரி மலையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதி

0

நாளை முதல் 4 நாட்களுக்கு சதுரகிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தர, சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது.

இம்மாதம் பிரதோஷம் மற்றும் பௌர்ணமியில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இந்த சிறப்பு பூஜைகளில் பங்கேற்று தரிசனம் செய்வதற்காக சதுரகிரி மலையில் பக்தர்கள் நாளை (சனிக்கிழமை) முதல் 20-ந்தேதி வரை 4 நாட்கள் வலம் வந்து தரிசனம் செய்ய வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. பிரதோஷ மற்றும் பௌர்ணமி வழிபாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், மலையேற்றம் அனுமதிக்கப்படும் நாட்களில் எதிர்பாராத கனமழை பெய்தால், பாதுகாப்பு கருதி பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் இரவு தங்க அனுமதி இல்லை. மேலும் தடை செய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை வனத்துறையினர் விதித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here