WhatsApp Channel
மாணவர்களின் தற்கொலையை தடுக்க பள்ளிகளில் நலக்குழு அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டுதல் வரைவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
நீட் உள்ளிட்ட தேர்வு முடிவுகள் வெளியானதும் மாணவர்களின் தற்கொலைகள் பரவலாக நடக்கின்றன. மேலும் பல்வேறு காரணங்களால் மாணவர்கள் மனமுடைந்து தற்கொலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதுபோன்ற மாணவர் தற்கொலைகளை தடுக்க மத்திய அரசு ஆலோசனை நடத்தி வந்தது.
ராஜஸ்தானின் போட்டித் தேர்வு பயிற்சி நகரமான கோடாவில், பொறியியல் மற்றும் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராகி வரும் நிலையில், சிலர் தற்கொலை செய்து கொண்டதால், தற்கொலைகளைத் தடுக்க மத்திய பள்ளிக் கல்வி அமைச்சகம் ‘உம்மீத்’ என்ற வரைவு வழிகாட்டியை வெளியிட்டுள்ளது.
வரைவு பல்வேறு வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது. அவை வருமாறு:-
- பள்ளி முதல்வர் தலைமையில் பள்ளி நலக்குழு அமைக்கலாம். தற்கொலை உள்ளிட்ட நெருக்கடியான சூழ்நிலைகளை கையாள்வதில் அதன் உறுப்பினர்கள் கவனம் செலுத்த வேண்டும்.
- மாணவர்கள் மன அழுத்தத்தில் இருந்தால், பெற்றோர் அல்லது சமூகத்தினர், நலக்குழுவுக்கு தகவல் தெரிவித்து, தற்கொலையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*பள்ளியில் சக மாணவர்களுடன் ஒப்பிடுதல், தோல்வி பயம், தோல்வியை நிரந்தரமாக நினைத்து அதிலிருந்து மீள முடியாமல் தவித்தல், படிப்பு பயம், வெற்றியை அளவிடும் பயம் போன்றவற்றை போக்க முயற்சிக்க வேண்டும்.
- காலி வகுப்பறைகளை பூட்டுதல், இருண்ட தாழ்வாரங்களில் விளக்குகள் அமைத்தல், தோட்டப் பகுதிகளை சுத்தமாகப் பராமரித்தல் போன்றவற்றையும் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு கூறுகிறது.
Discussion about this post