WhatsApp Channel
இந்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் 2 நாட்கள் ஓமன் சென்று அந்நாட்டு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வி.முரளிதரன் 2 நாள் சுற்றுப்பயணமாக ஓமன் சென்றுள்ளார். அவரை விமான நிலையத்தில் இந்திய தூதர் அமித் நரங் உள்ளிட்ட ஓமன் வெளியுறவு அமைச்சக அதிகாரிகள் வரவேற்றனர்.
பின்னர் அவர் ஓமன் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் டாக்டர் மஹத் சேட் பா ஓவைனை சந்தித்தார். அப்போது, தொழிலாளர் நலத்துறையில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
இரு நாடுகளுக்கும் பயன்தரும் வகையில் பல்வேறு விஷயங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஓமனில் உள்ள இந்திய தொழிலாளர்களின் நிலை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதையடுத்து, அமைச்சர் முரளிதரன், ஓமன் நாட்டின் பொருளாதார அமைச்சர் சைட் அல் சக்ரியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்தியா மற்றும் ஓமன் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே பாரம்பரிய ஒத்துழைப்பு இருந்து வருகிறது. பொருளாதாரத் துறையில் இருதரப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
பின்னர் மஸ்கட்டில் உள்ள சுல்தான் கபூஸ் பெரிய மசூதியை பார்வையிட்டார். அவருக்கு பள்ளி நிர்வாகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பின், மசூதியில் உள்ள பிரதான பிரார்த்தனை கூடம், நூலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டார். அமைச்சர் முரளிதரன் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, பெரிய பள்ளிவாசலுக்கு சென்றது குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பின்னர் மஸ்கட் இந்தியன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் முரளிதரன் பங்கேற்றார். மேலும், இந்திய சமூக மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய சமூக உறுப்பினர்கள் மற்றும் மருத்துவ நிறுவனங்களின் பிரதிநிதிகள் குழு அமைச்சர் முரளிதரனை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்களிடம் பல்வேறு கருத்துக்களை கேட்டறிந்தார். அதன் அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்த அவர், இந்திய-ஓமன் உறவில் முக்கியப் பங்காற்றியதற்குப் பாராட்டு தெரிவித்தார்.
Discussion about this post