WhatsApp Channel
பீகார் அரசியலில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. “இந்தியா” கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவதாகவும், பீகார் சட்டசபையை கலைக்கும் திட்டம் குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் மாநில சட்டசபை தேர்தல் 2020 நடைபெற்றது. தேர்தலில் பாஜகவும், நிதிஷ்குமாரின் ஜேடியூவும் இணைந்து போட்டியிட்டன. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் லாலுவின் ஆர்ஜேடி 75 இடங்களிலும், பாஜக 74 இடங்களிலும், நிதிஷ்குமாரின் ஜேடி(யு) 43 இடங்களிலும் வெற்றி பெற்றன. பீகாரில் ஆட்சி அமைக்க 122 இடங்கள் தேவை. பாஜக, ஜேடியு மற்றும் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் நிதிஷ்குமார் முதல்வரானார்.
பாஜகவில் இருந்து விலகி புதிய கூட்டணி: ஆனால் நிதிஷ்குமாரின் ஜேடியு 2 ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. நிதிஷ்குமார் தலைமையில் ஆர்ஜேடி, ஜேடியு, காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுடன் இணைந்து புதிய கூட்டணி ஆட்சி அமைந்தது. இந்த அடிப்படையில்தான் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து லோக்சபா தேர்தலுக்கு “இந்தியா” கூட்டணி அமைக்கும் முயற்சியில் நிதிஷ்குமார் தீவிரம் காட்டி வந்தார். அப்படி உருவான “இந்தியா” கூட்டணி இப்போது காங்கிரஸின் கைகளில் உள்ளது.
“இந்தியா” கூட்டணியில் ஒதுங்கிய நிதிஷ்: தான் உருவாக்கிய “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராகவும், பிரதமர் வேட்பாளர் என்ற கனவிலும் வலம் வந்தார் நிதிஷ்குமார். ஆனால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி அவருக்கு அழுத்தம் கொடுத்தனர். இதனால், “இந்தியா” கூட்டணி மீது நிதிஷ்குமார் கடும் அதிருப்தியில் உள்ளார். ராகுல் காந்தியும் அவரை சமாதானப்படுத்த முயன்றார்.
மோடிக்கு திடீர் பாராட்டு: இந்நிலையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு பீகார் முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது வழங்குவதாக திடீரென அறிவித்தது. இது பீகார் அரசியலில் புயலை கிளப்பியுள்ளது. பீகாரின் கக்கன், காமராஜ் என்று போற்றப்படும் மிகவும் பின்தங்கிய சமூகத்தின் தலைவராக இருந்தவர் கர்பூரி தாக்கூர். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கிய பிறகு, பாஜக மற்றும் பிரதமர் மோடியை நிதீஷ் குமார் பாராட்டினார்.
லாலுவுக்கு குட்டு: வாரிசு அரசியலையும் தடுக்க முடியாத போக்கில் வெளுத்து வாங்கினார் நிதீஷ்குமார். இதனால் லாலு பிரசாத் யாதவ் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர். லாலு பிரசாத் குடும்பம் அரசியலில் உள்ளது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவும் துணை முதல்வராக உள்ளார். மேலும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாபில் “இந்தியா” கூட்டணியில் காங்கிரஸுடனான உறவை முறித்துக் கொள்வதாக அறிவித்துள்ளன. இந்நிலையில், நிதிஷ்குமாரின் பா.ஜ., மீது திடீர் பாசம் மற்றும் லாலு மீதான தாக்குதல்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பின.
ஆட்சி கலைப்பு? பாஜக கூட்டணிக்கு தாவு?: இதனிடையே, பீகார் மாநில சட்டசபையை கலைப்பது குறித்து நிதிஷ்குமார் ஆலோசனை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. “இந்தியா” கூட்டணியில் இருந்து விலகி மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய நிதிஷ்குமார் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிதிஷ்குமாரின் இந்த திடீர் நடவடிக்கை தேசிய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post