WhatsApp Channel
லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில் 2 மாதங்களில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி மீண்டும் பிப்ரவரி 18ம் தேதி தமிழகம் வருகிறார். திருப்பூர் பல்லடத்தில் நடைபெறும் பா.ஜ., நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி முன்னிலையில், கொங்கு அரசியல் கட்சிகளின் மூத்த தலைவர்கள் சிலர், பா.ஜ.,வில் இணையும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்களவை தேர்தல் தேதி மார்ச் முதல் வாரத்தில் அறிவிக்கப்படும். லோக்சபா தேர்தலை ஏப்ரல் 2வது வாரம் முதல் மே 2வது வாரம் வரை நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாக நடத்த தேர்தல் கமிஷன் ஏற்பாடுகளை செய்து வருகிறது. லோக்சபா தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
இதனிடையே, 2 மாதங்களில் 3வது முறையாக பிரதமர் மோடி மீண்டும் பிப்ரவரி 18ம் தேதி தமிழகம் வர உள்ளார். பிரதமர் மோடி இந்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 2-ம் தேதி திருச்சிக்கு விஜயம் செய்தார்.திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி திறந்து வைத்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பிரதமர் மோடி 2வது முறையாக ஜனவரி 19, 20, 21 ஆகிய 3 நாட்கள் தமிழகம் வந்தார். கோலோச்சியத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் மற்றும் ராமேஸ்வரம் கோவில்களில் பிரார்த்தனை செய்தார். இந்தியாவின் தென்கோடியான தனுஷ்கோடிக்கும் பிரதமர் மோடி விஜயம் செய்தார்.
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வரவுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பல்வேறு கட்டங்களாக நடத்தும் என் மண் என் மக்கள் பாதயாத்திரை திருப்பூர் பல்லடத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரசாரத்தை அதிகாரப்பூர்வமாக தொடங்குவார் என்றும் கூறப்படுகிறது.
பிப்ரவரி 18-ம் தேதி பிரதமர் மோடியின் நிகழ்ச்சியில், அரசியல் கட்சிகளில் இருந்து ஒதுக்கப்பட்ட அல்லது அதிருப்தியில் இருக்கும் சில சீனியர்களை பாஜக பக்கம் கொண்டு வர பாஜக தரப்பு தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் பிப்ரவரி 18-ம் தேதி பிரதமர் மோடியின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post