WhatsApp Channel
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அரசு செயல்பட்டு வருவதாக குடியரசுத் தலைவர் திராருபதி முர்மு தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி திரௌபதி முர்மு கூறியதாவது:-
பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழை மக்கள் இந்த நாட்டின் தூண்கள். இந்தியாவில் இந்த 4 தூண்களை வலுப்படுத்த அரசு செயல்பட்டு வருகிறது.
கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியா வெற்றிகரமாக மீண்டுள்ளது. உலகளாவிய டிஜிட்டல் பணம் செலுத்துவதில் இந்தியாவின் பங்கு 46 சதவீதம். குழாய்கள் மூலம் வீடுகளுக்கு குடிநீர் கொண்டு செல்லும் பணி வேகமாக நடந்து வருகிறது. ரயில்வே துறையை முழுமையாக மின்மயமாக்கும் பணி விரைவில் முடிக்கப்பட உள்ளது. 100க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் ஏழை மக்களின் பணம் சேமிக்கப்படுகிறது. இந்தியாவில் சாலை போக்குவரத்து அபரிமிதமாக வளர்ந்துள்ளது.
கிராமங்களில் கிட்டத்தட்ட 4 லட்சம் கி.மீ. புதிய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. தேசிய நெடுஞ்சாலையின் நீளம் 90 ஆயிரம் கி.மீட்டரிலிருந்து 1.46 லட்சம் கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. எந்த ஒரு பயனாளியையும் விட்டு வைக்காமல் அரசின் பலன்கள் சென்றடைய வேண்டும் என்பதே எனது அரசின் குறிக்கோள். ஆண்டு வருமானம் ரூ.7 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
உதான் திட்டம் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மலிவான விமான டிக்கெட்டுகளை வழங்குகிறது. நாட்டில் விமான நிலையங்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் மூலம் 3 கோடி ஏழைகள் பயனடைந்துள்ளனர்.
உற்பத்தித் துறையில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்கும் என்று உலக நாடுகள் நம்புகின்றன. உலகளாவிய டிஜிட்டல் பணம் செலுத்துவதில் இந்தியாவின் பங்கு 46 சதவீதம். இந்தியா தொழில் தொடங்க எளிதான இடமாக மாறி வருகிறது.
ஏழை பெண்களுக்கு 7 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயக் கடன் பெறுவது எளிதாகிவிட்டது. உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலை 2.5 மடங்கு அதிகரித்துள்ளது. ஏழைகளுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்பட்டுள்ளன. வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கும் ஜல்ஜீவன் திட்டத்துக்கு ரூ.4 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது.
உலகமே மேக் இன் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்பட்டுள்ளது. மேக் இன் இந்தியா உலகளாவிய பிராண்டாக மாறியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் தீவிரவாதம் குறைந்துள்ளது. மாவோயிஸ்ட் வன்முறைகளும் நாட்டில் குறைந்துள்ளன.
சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரில் இன்று நிலைமை பாதுகாப்பாக உள்ளது. பயங்கரவாதச் செயல்களுக்கு நமது படைகள் பதிலடி கொடுக்கின்றன. ஆயிரக்கணக்கான பழங்குடியின கிராமங்களுக்கு மின்சாரம் மற்றும் சாலை இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
பழங்குடியின குடும்பங்களுக்கு குழாய் மூலம் சுத்தமான தண்ணீர் கிடைக்கத் தொடங்கியுள்ளது. பழங்குடியின கிராமங்களுக்கு 4ஜி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகளால் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துபவர்களின் சதவீதம் குறைந்துள்ளது.
தாய்மொழியில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கையால் மாணவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைத்துள்ளன. பொறியியல், மருத்துவம், படிப்புகள் பிராந்திய மொழிகளில் கற்பிக்கப்படுகின்றன. 4.1 கோடி ஏழைகளுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. கைவினைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஓபிசியினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய அரசு உறுதி செய்துள்ளது. திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்க சட்டம் இயற்றப்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இரட்டை இலக்கத்தில் இருந்த பணவீக்கம் தற்போது ஒற்றை இலக்கத்தில் உள்ளது.
ஜி20 மாநாட்டை இந்தியா நடத்திய விதம் உலகம் முழுவதும் பாராட்டப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகளின் நண்பனாக இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. உலகில் எந்தப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டாலும் இந்தியர்களை மீட்க மத்திய அரசு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்களின் முன்னேற்றம் முதல் சுற்றுச்சூழல் வரை, உலக அரங்கில் இந்தியா ஒரு முக்கிய குரலாக உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு அரசு முன்னெப்போதும் இல்லாத ஆதரவை வழங்கி வருகிறது. விளையாட்டுத் துறையை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இளைஞர்களின் திறன்களை வேலைவாய்ப்புடன் இணைப்பதன் மூலம் பொருளாதாரத்தை வலுப்படுத்துகிறோம். இந்தியாவின் பாரம்பரிய யோகாசனமான ஆயுர்வேதத்தை உலகம் முழுவதும் பரப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தி ராமர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் பல வருடங்களாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த மாற்றங்கள் 10 வருடங்களில் நிறைவடைந்துள்ளன. பலராமன் கும்பாபிஷேகம் முடிந்த 5 நாட்களில் 13 லட்சம் பேர் அயோத்திக்கு வருகை தந்துள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
Discussion about this post