WhatsApp Channel
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிரோமணி அகாலி தளம் மீண்டும் இணைகிறது. பஞ்சாப் மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் 7 தொகுதிகளில் அகாலி தளமும், 6 தொகுதிகளில் பா.ஜ.கவும் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிரோமணி அகாலி தளம் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நீண்ட காலமாக இருந்து வரும் கட்சிகளில் ஒன்றாகும். அகாலி தளம் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கும் நிலையில் இருந்ததில்லை. பஞ்சாப் பொற்கோயில் ராணுவ நடவடிக்கை, இந்திரா காந்தி படுகொலை, சீக்கியர்கள் படுகொலை என காங்கிரஸுடன் சேராது என்ற நிலையிலும் அகாலிதளம் பாஜக தலைமையிலான கூட்டணியில் நீடித்தது.
ஆனால் மத்திய அரசின் 3 விவசாயச் சட்டங்கள் அகாலி தளத்திற்கு பெரும் நெருக்கடியை கொடுத்தன. பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் ஓராண்டுக்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தியதால் பாஜக கூட்டணியில் இருந்து அகாலி தளம் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் மத்திய அமைச்சர் பதவியையும் இழந்தார். பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் அகாலி தளம் பாஜகவுடன் இணையவில்லை.
தற்போது லோக்சபா தேர்தல் நெருங்கி வருவதால், பழைய கூட்டணி கட்சிகள் ஒவ்வொன்றாக பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்து வருகின்றன. இந்தியக் கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார், அந்த அணியை நடுவில் விட்டுவிட்டு பாஜக கூட்டணிக்கு ஓடிவிட்டார். அதேபோல் ராஷ்ட்ரிய லோக் தளமும் பாஜக கூட்டணிக்கு திரும்புகிறது.
இதையடுத்து அகாலி தளம் கட்சியும் பாஜக கூட்டணியில் இணைய உள்ளது. இது தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையே பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்து வருகிறது. பஞ்சாபில் 7 தொகுதிகளில் அகாலி தளமும், 6 தொகுதிகளில் பாஜகவும் போட்டியிடும். இதனால், அகாலி தளம், பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் எந்த நேரத்திலும் இணையும் என, டில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
Discussion about this post