WhatsApp Channel
இன்று ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பாதும் நிசங்க (210 ரன்கள்) இரட்டை சதம் அடித்தார்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றது. அதன்படி இவ்விரு அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று பல்லேகலையில் நடக்கிறது.
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன் பின்னர் இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பதும் நிசங்க மற்றும் அவிஷ்க பெர்னாண்டோ ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமாக விளையாடி அற்புதமான அரைசதம் அடித்தனர்.
இதில் பென்னாண்டோ 88 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இதன் பின்னர் களம் இறங்கிய குசல் மெண்டிஸ் 16 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் சமரவிக்ரம 45 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். அதன்பின் அசலங்க களம் இறங்கினார். ஒரு பக்கம் நின்ற நிசங்கா, ஆப்கானிஸ்தானின் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார்.
நிசங்க தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 136 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார். இறுதியில், இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 381 ரன்கள் குவித்தது. இலங்கை அணி சார்பாக நிசங்க 210 ஓட்டங்களைப் பெற்றார். அதன்பின் 382 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் விளையாட உள்ளது.
தற்போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து புதிய சரித்திரம் படைத்துள்ளார் பதும் நிசங்கா. அதாவது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இலங்கை அணிக்காக இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பதும் நிசங்க பெற்றார்.
Discussion about this post