WhatsApp Channel
நெல்லை, கோவை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, கோவை, நெல்லை, மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கோவை உக்கடம் பகுதியில் உள்ள அபிபுல் ரஹ்மான் வீட்டிலும், நெல்லை ஏர்வாடியில் உள்ள பக்ருதீன் அலி வீட்டிலும் என்ஐஏ சோதனை நடைபெற்று வருகிறது.
மிரட்டி பணம் பறித்தல், மூளைச்சலவை செய்தல் மற்றும் உபகரணங்களை வழங்குதல் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இந்த சோதனை நடத்தப்படுகிறது. கோவை கார் குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post