WhatsApp Channel
தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் இன்று கடும் வெப்பம் நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தலின் 2ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. நாட்டின் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த மாநிலங்களில் இன்று கடுமையான வெயில் கொளுத்தும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சில மாநிலங்களை வெப்பச் சலனம் தாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று முதல் 5 நாட்களுக்கு மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின் பல பகுதிகளில் இயல்பான முதல் கடுமையான வெப்ப அலை வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிற்கு சிவப்பு எச்சரிக்கையும், பீகார் மற்றும் கர்நாடகாவிற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், அனல் காற்று வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், இன்றைய தேர்தலில் வாக்குப்பதிவு குறையலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இது அரசியல் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
Discussion about this post