WhatsApp Channel
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மத துன்புறுத்தல் காரணமாக 2014ஆம் ஆண்டுக்கு முன்பு இந்தியாவுக்கு அகதிகளாக வந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் 2019 நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதப் பிரச்னைகளைச் சந்தித்து, இந்தியாவில் அகதிகளாக வாழும் இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி, கிறிஸ்தவ மதங்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெறுவார்கள். ஆனால், 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்ட போதும், அந்தச் சட்டம் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய உலகளாவிய வர்த்தக மாநாட்டில் உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
நிகழ்ச்சியில் அமித் ஷா பேசினார்.
நாடாளுமன்றம் என்ன முடிவு எடுத்தது என்பதில் ஆச்சரியமில்லை. நாடாளுமன்றத்தில் மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டும் என்பது காங்கிரஸும் மற்ற எதிர்க்கட்சிகளும் அறிந்ததே. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370 சட்டத்தை ரத்து செய்தோம். எனவே, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் 370 தொகுதிகளில் பாஜகவுக்கு பொதுமக்கள் வெற்றியைத் தருவார்கள் என்றும், 400க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறும் என்றும் நம்புகிறேன்.
ராமர் பிறந்த அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட வேண்டும் என்று 500 முதல் 550 ஆண்டுகளாக மக்கள் நம்பி வந்தனர். ஆனால் அரசியல் எதிர்ப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு காரணங்களை கூறி ராமர் கோவில் கட்ட அனுமதி மறுக்கப்பட்டது.
குடியுரிமை திருத்தச் சட்டம் 2019ல் அமல்படுத்தப்பட்டது. விதிகள் வெளியிடப்பட்டதும், வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும். நமது முஸ்லிம் சகோதரர்கள் தவறாக வழிநடத்தப்பட்டு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தூண்டிவிடப்பட்டுள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் மதரீதியாக தாக்கப்பட்டு இந்தியாவுக்கு வந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்காக குடியுரிமை திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம் யாருடைய குடியுரிமையையும் பறிப்பதற்காக அல்ல.
பொது சிவில் கோட் இந்தியாவின் முதல் பிரதமர் கையெழுத்திட்ட இந்திய அரசியலமைப்பில் உள்ளது. ஆனால் அரசியல் சமரசத்துக்காக சிவில் சட்டத்தை அமல்படுத்தாமல் காங்கிரஸ் புறக்கணித்துள்ளது. உத்தரகாண்டில் சிவில் சட்டத்தை அமல்படுத்துவது சமூக மாற்றத்திற்காக. பொது சிவில் சட்டம் அனைத்து மட்டங்களிலும் கலந்தாலோசிக்கப்பட்டு சட்ட ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும். மதச்சார்பற்ற நாட்டில் மத அடிப்படையிலான சிவில் சட்டங்கள் இருக்கக்கூடாது.’
Discussion about this post