WhatsApp Channel
ரபா நகரில் ஹமாஸ் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாசுக்கும் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி போர் வெடித்தது. போரில் இதுவரை 28,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் காஸாவின் மொத்த சனத்தொகையில் 80 வீதத்திற்கும் அதிகமானோர் யுத்தம் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் தெற்கு காசாவில் உள்ள ரபா நகரில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இதனிடையே காஸாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி மற்றும் தரைவழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. எகிப்து எல்லையில் அமைந்துள்ள ரபா நகரில் ஹமாஸ் பதுங்கியிருப்பதாகவும், அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல்களில் 10 குழந்தைகள் உட்பட 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்படும் வரை போர் நிறுத்தம் இருக்காது என்று நெதன்யாகு கூறுகிறார். அதேநேரம், போரில் பொதுமக்கள் மீதான தாக்குதல்களுக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post