WhatsApp Channel
ராமர் அழைத்ததும் அயோத்தி செல்வோம் என்று அகிலேஷ் யாதவ் கூறியிருந்தார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஜனவரி 22ஆம் தேதி கோலாகலமாக நடைபெற்றது. தற்போது அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் மாநில எம்எல்ஏக்கள் பலர் அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொள்ளுமாறு சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது, ஆனால் அவர் அதை நிராகரித்தார். முன்னதாக உத்தரபிரதேச சட்டசபையில் அகிலேஷ் யாதவ், “ராமர் எங்களை அழைத்தவுடன் நாங்கள் அயோத்தி செல்வோம்” என்று கூறியிருந்தார்.
Discussion about this post