WhatsApp Channel
உயர்த்தப்பட்ட வட்டி நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு சந்தாதாரரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
நாட்டின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு அமைப்புகளில் ஒன்றான, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களுக்கு PF, ஓய்வூதியம் மற்றும் காப்பீட்டுப் பலன்கள் வடிவில் சமூகப் பாதுகாப்புப் பலன்களை வழங்குகிறது. தொழிலாளர் வைப்பு நிதிக்கு, சர்வதேச சூழ்நிலை மற்றும் சந்தை நிலவரத்தின் அடிப்படையில் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. 2022-23 நிதியாண்டிற்கான வட்டி விகிதம் 8.15 சதவீதம்.
இந்நிலையில், 2023-24 நிதியாண்டுக்கான வட்டி விகிதம் சற்று உயர்த்தப்பட்டுள்ளது. வட்டி 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வருங்கால வைப்பு நிதியின் இறுதி முடிவெடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் குழுவின் இன்றைய கூட்டத்தில் வட்டி விகித உயர்வு குறித்த முடிவு எடுக்கப்பட்டது. உயர்த்தப்பட்ட வட்டி நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு சந்தாதாரரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.
6 கோடிக்கும் அதிகமான பி.எஃப். சந்தாதாரர்களை மகிழ்ச்சியடையச் செய்கிறது.
Discussion about this post