WhatsApp Channel
பிரதமர் மோடி நாளை மறுநாள் கத்தார் செல்கிறார்.
பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நாளை ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை சந்திக்கிறார்.
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவில் கும்பாபிஷேகம் நாளை மறுநாள் (14ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த கும்பாபிஷேக விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இதையடுத்து, அபுதாபியில் உள்ள அரங்கில் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் இந்தியர்களிடையே பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.
இந்நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் பயணத்தை முடித்துக் கொண்டு அன்றைய தினம் (14ம் தேதி) பிரதமர் மோடி கத்தார் செல்கிறார். கத்தார் செல்லும் வழியில் அந்நாட்டு அதிபர் ஷேக் தமீம் பின் அகமது அல்தானியை பிரதமர் மோடி சந்திக்கிறார். இந்த சந்திப்பின் போது இருதரப்பு உறவுகள், வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
முன்னதாக, உளவு பார்த்ததாக கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 முன்னாள் இந்திய கடற்படை வீரர்களை கத்தார் அரசு விடுவித்துள்ளது. விடுதலை செய்யப்பட்டவர்களில் 7 பேர் இன்று இந்தியா வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Discussion about this post