WhatsApp Channel
முரசொலி நில விவகாரத்தில் அறக்கட்டளை மீதான புகாரில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் பஞ்சமி நிலம் என பாஜக மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019ஆம் ஆண்டு தேசிய தாழ்த்தப்பட்ட சாதிகள் ஆணையத்தில் புகார் அளித்தார். இதற்கு பதிலளிக்குமாறு பட்டியல் சாதிகள் ஆணையம் சம்மன் அனுப்பியது.
இதை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, “”புதிய சம்மன் அனுப்பி, விதிகளின்படி விசாரணை நடத்தி, உரிய உத்தரவு பிறப்பிக்க ஆணையத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முரசொலி அறக்கட்டளை சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.சஞ்சய் கங்காபூர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், “”அப்பீல் வழக்குக்கு, தேசிய பட்டியல் சாதி ஆணையம், புகார்தாரர் பா.ஜ.க நிர்வாகி சீனிவாசன் பதிலளிக்க வேண்டும். விசாரணையை, மார்ச், 11ம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதுவரை, முரசொலி அறக்கட்டளை மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது. .”
Discussion about this post