WhatsApp Channel
முதலீடு செய்வதற்கு ஏற்ற இடமாக இந்தியாவை உலகமே பார்க்கிறது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் ரூ.10 லட்சம் கோடி மதிப்பிலான 14,000 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில் உரையாற்றிய பிரதமர், 2025ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கும்பமேளா உத்தரப் பிரதேசத்தின் பொருளாதாரத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றார்.
வரும் காலங்களில் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உருவாகும். இன்று நாட்டில் உள்ள அனைவரும் வாரணாசி மற்றும் அயோத்திக்கு வர விரும்புகிறார்கள், என்றார்.
மாநிலத்தில் சிறு தொழில்முனைவோர், விமான நிறுவனங்கள், ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களுக்கு வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மோடி கூறினார்.
இந்தியாவில் முதலீட்டு சூழல் குறித்து பேசிய பிரதமர் மோடி, சிறந்த வருவாய்க்கான உத்தரவாதமான இடமாக இந்தியாவை இப்போது உலகம் பார்க்கிறது என்றார். உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் இந்திய அரசின் கொள்கைகள் மற்றும் ஸ்திரத்தன்மையை நம்புகிறார்கள், என்றார்.
தேர்தல்களின் போது மக்கள் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பதை நாம் அடிக்கடி பார்த்திருக்கிறோம், ஆனால் இன்று இந்தியா இந்த எண்ணத்தையும் உடைத்துவிட்டது. உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் தனது அரசாங்கத்தின் கொள்கைகளின் ஸ்திரத்தன்மையில் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என்றார்
இரட்டை இயந்திர ஆட்சியின் கீழ், உத்தரபிரதேச மாநிலம் சிவப்பு கம்பள கலாச்சாரத்திற்கு மாறியுள்ளது என்று அவர் கூறினார். இந்த காலகட்டத்தில், உத்தரபிரதேசத்தில் குற்ற விகிதங்கள் கணிசமாகக் குறைந்துள்ளது மற்றும் வர்த்தகம் மற்றும் வணிக வாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு உள்ளது என்று பிரமர் மோடி கூறினார்.
சுற்றுலா பயணிகள் தங்கள் பட்ஜெட்டில் 10 சதவீதத்தை உள்ளூர் பொருட்களை வாங்குவதற்கு ஒதுக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.
Discussion about this post