WhatsApp Channel
காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேசத்தில் யாத்திரை சென்றபோது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் ஈடுபட்டுள்ளார். இதேபோல், மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தனது அமேதி தொகுதியில் 4 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
2019க்கு பிறகு அமேதி தொகுதியில் ராகுல் காந்தியும், இரானியும் ஒரே நேரத்தில் வலம் வருகின்றனர். ஸ்மிருதி இரானி திகர்மாஃபி கிராமத்திற்கு சென்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பிரச்னைகளை விரைந்து தீர்க்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமேதி தொகுதியில் ராகுல் காந்தி யாத்திரை சென்றபோது தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது.
ராகுல் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமேதி மக்கள் கோபத்தில் உள்ளனர் என்பது தெளிவாகிறது என்றார். அமேதியில் பலரின் ஆதரவைப் பெற்ற வேட்பாளரை எதிர்த்துப் போராடியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post