WhatsApp Channel
இமாச்சல பிரதேசத்தில் நேற்று நடந்த ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு வாக்களித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 15 பாஜக எம்எல்ஏக்களை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதேபோல் 3 சுயேச்சை வேட்பாளர்களும் காங்கிரசுக்கு ஆதரவளித்தனர். பாஜக 25 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக உள்ளது. இந்நிலையில், மாநிலத்தில் இன்று ராஜ்யசபா உறுப்பினருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்களும், 3 சுயேச்சை எம்எல்ஏக்களும் பாஜகவுக்கு வாக்களித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பாஜகவுக்கு ஏற்கனவே 25 எம்எல்ஏக்கள் பலம் இருந்த நிலையில், தற்போது 6+3+25 என 34 ஆக அதிகரித்துள்ளது. இந்த மாநிலத்தில் ஆட்சி அமைக்க 35 தொகுதிகளை கைப்பற்றியிருக்க வேண்டும். எனவே தற்போதைய ஆளும் காங்கிரஸுக்கும், பாஜகவுக்கும் சம பலம் உள்ளது. அதனால் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அம்மாநில காங்கிரஸ் அமைச்சர் விக்ரமாதித்ய சிங் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாநிலத்தில் பொதுப்பணி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மீது காங்கிரஸ் தலைவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அமைச்சர் ஒருவர் ராஜினாமா செய்துள்ளார்.
ராஜினாமா செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய துணை அமைச்சர் விக்ரமாதித்ய சிங், “தற்போதைய சூழ்நிலையில் நான் ஆட்சியில் நீடிப்பது சரியல்ல என்பதை மட்டும் கூற விரும்புகிறேன். எனவே அமைச்சரவையில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். வரும் நாட்களில், எனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து, எதிர்கால நடவடிக்கை குறித்து முடிவு எடுப்பேன். . இவர் இந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை இமாச்சல பிரதேச ஆளுநரை பாஜக எம்.பி.க்கள் சந்தித்துள்ளனர். விரைவில் சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பாஜக எம்எல்ஏக்கள் 15 பேரை மாநிலங்களவை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்துள்ளார். ஜெய்ராம் தாக்கூர், விபின் சிங் பர்மர், ரந்தீர் சர்மா, லோகேந்தர் குமார், வினோத் குமார், ஹன்ஸ் ராஜ், ஜனக் ராஜ், பல்பீர் வர்மா, திரிலோக் ஜம்வால், சுரேந்தர் ஷோரே, தீப் ராஜ், பூரன் தாக்கூர் ஆகிய 15 பேர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பாஜக எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதால் நம்பிக்கை வாக்கெடுப்பு இப்போதைக்கு சாத்தியமில்லை என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், நிலைமை பாஜகவுக்கு சாதகமாக மாறுவதற்கு முன்பு, நிலைமையை சரிசெய்ய டிகே சிவக்குமார் உள்ளிட்ட கர்நாடக காங்கிரஸ் தலைவர்கள் சிம்லா சென்றுள்ளனர்.
Discussion about this post