WhatsApp Channel
இந்தியாவின் முதல் நீருக்கடியில் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று கொல்கத்தாவில் தொடங்கி வைக்கிறார்.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பாதையானது நீருக்கடியில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை கொண்ட நாட்டிலேயே முதன்மையானது. இது ஹவுரா மற்றும் கொல்கத்தா ஆகிய இரட்டை நகரங்களை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில் 6 நிலையங்கள் உள்ளன. இதில் 3 நிலையங்கள் நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ளன.
ரயில்கள் ஹூக்ளி ஆற்றை 32 மீட்டர் ஆழத்திலும், ஆற்றின் கீழ் சுமார் 520 மீட்டர் நீளத்திற்கு 45 வினாடிகளில் கடக்கும். இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.
கொல்கத்தா மெட்ரோவின் ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் மெட்ரோ பிரிவு, கவி சுபாஷ்-ஹேமந்தா முகோபாத்யாய் மெட்ரோ பிரிவு மற்றும் தாரதாலா-மஜெர்ஹாட் மெட்ரோ பிரிவு ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இந்தப் பிரிவுகள் சாலைப் போக்குவரத்தைக் குறைக்கவும், தடையற்ற மற்றும் வசதியான போக்குவரத்துச் சேவைகளை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post