WhatsApp Channel
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் தற்போது சிறையில் உள்ள சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இர்பான் சோலங்கியின் வீடுகளில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
கான்பூரில் உள்ள இர்பானின் வீட்டில் காலை முதல் அமலாக்கத்துறையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். நிலம் கையகப்படுத்துதல், போலி ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அவரது சகோதரர் அர்ஷத் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ இம்பான் சோலங்கி, சட்டவிரோதமாக நில ஆக்கிரமிப்பு வழக்கில் 2022ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். நிலத் தகராறு, தீ வைத்தல், விமானப் பயணத்திற்கு போலி ஆதார் அட்டையைப் பயன்படுத்துதல், வங்கதேச குடிமக்களுக்கு போலி இந்தியக் குடியுரிமை வழங்குதல் உள்ளிட்ட 17 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால், ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்கும் வாய்ப்பை இழந்தார்.
AthibAn Tv WHATSAPP சேனலில் இணைய
வாட்ஸ்அப் சேனல் மூலம் இணையும் போது உங்கள் தொலைபேசி எண் யாருக்கும் தெரியாது, Green பட்டனை தொடவும் .
மேலும் தந்திச் செய்தி மூலம் முக்கிய தகவலுக்கு Red பட்டனை தொடவும்.
Discussion about this post