WhatsApp Channel
தேர்தல் பத்திர விவரங்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்குமாறு எஸ்பிஐ வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதன்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவை தொடர்ந்து எஸ்பிஐ இன்று தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது.
தேர்தல் பத்திரங்களைப் பெற்றவர்கள், அவற்றைப் பணமாக்கிய அரசியல் கட்சிகள், நன்கொடை தொகை உள்ளிட்ட விவரங்களை மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனால், இதை அமல்படுத்த அதிக கால அவகாசம் தேவைப்படும் என்றும், எனவே ஜூன் 30-ம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்றும் பாரத ஸ்டேட் வங்கி கடந்த 6-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், எஸ்பிஐ வங்கியின் கோரிக்கையை நிராகரித்தது. இன்று மாலைக்குள் தேர்தல் பத்திர விவரங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் எஸ்பிஐ சமர்ப்பித்துள்ளது.
Discussion about this post