பாரத் இல்லாமல் இன்று உலகில் முக்கியமான முடிவுகள் எடுக்கப்படுவதில்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சேவுகமூர்த்தி கோசாலா அறக்கட்டளை சார்பாக 10வது ஆண்டு வளர்ச்சித் திட்ட தொடக்க விழா மற்றும் யாகவேள்வி நிகழ்ச்சி நடைபெற்றது.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் ஆர்.என்.ரவி, விளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். முன்னதாக, கோ பூஜையில் பங்கேற்று விவசாய கண்காட்சியையும் பார்வையிட்டார்.
விழாவின் மேடையில் பேசிய அவர், 10 ஆண்டுகளுக்கு முன்பு உலகில் இந்தியாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றார்.
மற்ற நாடுகள் சொல்வதைக் கேட்கும் நிலையில் இருந்த இந்தியா, இன்று மற்ற நாடுகளுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றார்.
போர் அல்லது வளர்ச்சி குறித்ததாக இருந்தாலும், இந்தியாவின் கருத்து உலகில் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்று ஆளுநர் ரவி பெருமிதம் தெரிவித்தார்.