‘ஒன்றிய அரசு என்று கூறுவது பிரிவினைவாத திணிப்பு’ – சி.பி.ராதாகிருஷ்ணன்

0

“ஒன்றிய அரசு” என்ற பெயரிடுவது தவறானது. அப்படி என்றால், மாநிலங்களில் உள்ளவை பஞ்சாயத்து அரசுகளா? இது பிரிவினைவாத எண்ணத்தை ஊக்குவிக்கப்படும் முயற்சியாகவே தெரிகிறது என்று மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் கூறினார்.

இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தீவிரவாதத்தை கடுமையான முறையில் ஒழிக்க வேண்டும். அது மட்டுமே நாட்டின் முன்னேற்றத்திற்கும், அமைதிக்கும் வழிவகுக்கும் என்றார்.

மத்திய அரசு வழங்கும் நிதி மற்றும் உதவிகளை சிலர் பாராட்ட மறுக்கின்றனர். மத்திய அரசுடன் இணைந்து செயல்படுவது தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக அவசியம்.

தமிழ்நாட்டு ஆளுநர் நேர்மையுடன் பணியாற்றும் ஒருவர். அவருக்கு மாநில அரசு ஒத்துழைக்க வேண்டும் என தெரிவித்தார்.

டாஸ்மாக் பிரச்சனைக்கும் மேலாக, கஞ்சா மிக வேகமாக பரவி வருகிறது. எனவே கஞ்சாவை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு முன்னெடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளில் சில முரண்பாடுகள் உள்ளன என்றும்,

கேரள ஆளுநருக்கு துணைவேந்தர் நியமனத்தில் முழு அதிகாரம் உள்ளதாக ஒரு தீர்ப்பு வந்தது. ஆனால் தற்போது அதற்கு மாறான தீர்ப்பு வெளியாகியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

“ஒன்றிய அரசு” என குறிப்பிடுவது தவறு; “மத்திய அரசு” என்றே அழைக்க வேண்டும். இல்லையெனில், மாநில அரசு தாழ்வாகக் கருதப்படும். இது பிரிவினை நோக்கத்தையே ஊக்குவிக்கிறது எனக் கூறினார்.

கமல்ஹாசனைப் பற்றி ஆளுநர் கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. ஒருகாலத்தில், “திமுக-வை ஒழிக்க வேண்டும்” என கூறியவர், இன்று அதே கட்சியுடன் இருப்பது தமிழகத்திற்கு நன்மை தரும் என சொல்வது விசித்திரமாக உள்ளது என்றும் விமர்சித்தார்.

தமிழ் சம்ஸ்கிருதத்தில் இருந்து வந்தது என கூறுவதை நாங்கள் ஏற்க முடியாது. பேச்சுகளில் சிந்தனையுடன் நடந்துகொள்வது அவசியம். பொது வாழ்க்கையில் ஈடுபடுவோர் அடக்கமும் நிதானமும் கையாண்டு பேச வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

முருக பக்தர்களின் மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்குவது தமிழக அரசின் கடமையாகும் என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here