ஆபரேஷன் சிந்தூர்: இந்திய வரலாற்றின் முக்கிய வெற்றி – பிரதமர் மோடி

ஆபரேஷன் சிந்தூர்: இந்திய வரலாற்றின் முக்கிய வெற்றி – பிரதமர் மோடி

மத்திய பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் ‘மகிளா சக்திகரண் மகா சம்மேளனம்’ என்ற நிகழ்வில் கலந்துகொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்கு பதிலாக இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கை, இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிக முக்கியமானதும் வெற்றிகரமானதுமாக இருப்பதாகக் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்களை இந்தியா துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த நடவடிக்கை தீவிரவாதிகளுக்கும், அவர்களுக்குப் பின்தளத்தில் இருந்த ஆதரவாளர்களுக்கும் கடும் அதிர்வாக அமைந்தது. இனிமேல் இந்தியாவை எவனும் தாக்க முயன்றால், அவர்கள் விலையைக் கட்ட நேரிடும் என்றும் மோடி எச்சரித்தார்.

பெண்கள் பாதுகாப்பு துறையில் முன்னேற்றம்

இந்திய பாதுகாப்புத் துறையில் பெண்கள் எடுத்துள்ள முன்னேற்றம் குறித்து அவர் பேசினார். எல்லை பாதுகாப்பு படையில் உள்ள பெண்கள், ஆபரேஷன் சிந்தூரில் சிறப்பாக பங்கு பெற்றனர். கடற்படையில் பணியாற்றும் லெப்டினன்ட் கமாண்டர்கள் ரூபா மற்றும் தில்னா, பாய்மரப் படகில் 250 நாட்கள் கடல் பயணம் செய்து சாதனை புரிந்தது, இந்திய மகள்களின் தைரியத்தை உலகுக்கு எடுத்துச் செல்வதாகவும் அவர் கூறினார்.

சிந்தூரின் முக்கியத்துவம் மற்றும் பெண்கள் உரிமை

இந்திய கலாச்சாரத்தில் சிந்தூர் என்பது பெண்களின் சக்தியின் அடையாளம். அதே சிந்தூர், இப்போது இந்திய பெண்களின் துணிச்சலின் சின்னமாக மாறியுள்ளது. நாடாளுமன்றத்தில் 75 பெண்கள் எம்.பி.க்கள் இருப்பதும், மகளிர் ஒதுக்கீடு சட்டம் நிறைவேறியதும், பாஜக தலைமையிலான அரசு பெண்களுக்கு அதிகாரம் வழங்கும் முயற்சியை காட்டுகிறது.

ராணி அஹில்யாபாய் ஹோல்கருக்கு மரியாதை

300-வது பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் மோடி, ராணியின் நினைவு தபால் தலையும், ரூ.300 மதிப்புள்ள நாணயத்தையும் வெளியிட்டார். ராணியின் மகத்தான நிர்வாகத் திறன் மற்றும் சமூக நலனுக்காக அவர் எடுத்த செயல்கள், இன்றைய அரசுக்கும் வழிகாட்டியாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.

மக்களை தெய்வமாகக் காணும் அரசு

பாஜக அரசு ‘நாகரீக் தேவோ பவா’ என்ற கொள்கையை பின்பற்றுவதாக மோடி கூறினார். மக்கள் நலனுக்காகவே இந்த அரசு செயல்படுகிறது என்றும், இது ராணி அஹில்யாபாய் ஹோல்கரின் வழிகாட்டுதலாகும் என்றும் தெரிவித்தார்.

Facebook Comments Box