பெங்களூரு வெற்றிப் பேரணி நெரிசல் உயிரிழப்பு: ஆர்சிபி அணி இரங்கல்

0

ஆர்சிபி அணி வெளியிட்ட இரங்கல் செய்தி: வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து இரக்கம் தெரிவித்தது

நடப்பு ஐபிஎல் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, அந்த வெற்றியை கொண்டாடும் வகையில் ஜூன் 4-ஆம் தேதி பெங்களூருவில் வெற்றிப் பேரணியை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வை காண விரும்பி திரண்ட ரசிகர்களின் பெரும் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழக்க, 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ உதவி அளிக்கப்பட்டு, அவர்களை ஆம்புலன்ஸ்களில் பவுரிங் மருத்துவமனை, வைதேகி மருத்துவமனை மற்றும் அடல் பிஹாரி வாஜ்பாய் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதில் 25-க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இந்த துயரான சம்பவம் குறித்து ஆர்சிபி அணி ஆழ்ந்த இரங்கலை வெளியிட்டுள்ளது. அவர்கள் தெரிவித்துள்ள செய்தியில்,

“இன்று பிற்பகல் நமது அணியின் வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள் பெங்களூரு முழுவதும் திரண்டிருந்தனர். இந்தக் கூட்டத்தின் போதே ஏற்பட்ட துயரான நிகழ்வுகள் எங்களை மிகவும் வருத்தமடையச் செய்துள்ளன.

மக்கள் பாதுகாப்பும் நலனும் எங்களுக்கு முக்கியமானவை. உயிரிழந்தவர்களுக்கு நாங்கள் எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கிறோம். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எங்கள் இரங்கலும், அனுதாபமும்.

சூழ்நிலையை அறிந்த உடனே நாங்கள் திட்டங்களை மாற்றியமைத்து, உள்ளூர் நிர்வாகத்தின் ஆலோசனைகளை பின்பற்றினோம்.

எங்கள் ரசிகர்களை அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.”

என ஆர்சிபி விளக்கம் அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here