வங்கதேசத்தில் இருந்து மருத்துவ சிகிச்சைக்காக இந்தியா வரும் மக்களின் நலன் கருதி இ-விசா நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை பிரதமர் மோடி வரவேற்றார். நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்தியாவின் அண்டை நாடுகளின் முன்னுரிமை, கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தியா-பசிபிக் பார்வை ஆகியவற்றில் வங்காளதேசம் தவிர்க்க முடியாத இடத்தைப் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார்.
இந்தியா – வங்கதேசம் இடையே இந்திய ரூபாயில் வர்த்தகம் தொடங்குதல், கங்கையில் படகு சவாரி அமைத்தல், குடிநீர் குழாய் இணைப்பு போன்ற பல திட்டங்கள் கடந்த ஓராண்டில் நிறைவேற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, வங்கதேச நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ளேன். மேலும் வங்கதேசம் செல்ல பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.