நீதிமன்றத்தை கோயிலுக்கும், நீதிபதிகளை கடவுளுக்கும் சமமாக கருதுவது மிகவும் ஆபத்தானது… நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்

0

நீதிமன்றத்தை கோயிலுக்கும், நீதிபதிகளை கடவுளுக்கும் சமமாக கருதுவது மிகவும் ஆபத்தானது என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நடைபெற்ற தேசிய நீதிக்கழகத்தின் மண்டல மாநாட்டில் பங்கேற்ற டி.ஒய்.சந்திரசூட், கிரிமினல் வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பளிக்கும் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர்களின் நிலையை கருணையுடன் தீர்ப்பதாக கூறினார்.

பொது மக்கள் நீதித்துறையை அணுகுவதற்கும் தீர்ப்புகளைப் புரிந்துகொள்வதற்கும் மொழி தடையாக இருப்பதாக தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.

அந்த வகையில், தீர்ப்புகளை மொழிபெயர்ப்பதற்கு தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக இருப்பதாகவும், இதுவரை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீர்ப்புகள் பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here