சத்தீஸ்கரில் முகாமிட்டிருந்த 5 நக்சலைட்டுகள் பாதுகாப்புப் படையினரின் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் நக்சலைட்கள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்பு படையினர் அங்கு சோதனை நடத்தினர்.
அப்போது, நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்த மோதலில் 5 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதில் பாதுகாப்பு படையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post