நீட் முறைகேடு இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்… பிரதமர் மோடி

0

நீட் தேர்வில் முறைகேடு செய்து இளைஞர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

ராஜ்யசபாவில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய பிரதமர், நீட் தேர்வு வினாத்தாள் கசிவை தனது உரையில் முக்கியப் பிரச்னையாகக் குறிப்பிட்டதை குடியரசுத் தலைவர் நினைவு கூர்ந்தார்.

இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சிகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும் என்றும், போட்டித் தேர்வு முறைகேடுகளைத் தடுக்க நாடாளுமன்றத்தில் கடுமையான சட்டம் இயற்றப்படுகிறது என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மாணவர்களின் அச்சத்தை நீக்கும் வகையில் ஒட்டுமொத்த கல்வித்துறையையும் பலப்படுத்தி வருவதாகக் கூறிய பிரதமர் மோடி, அப்போதுதான் மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தங்கள் திறனை வெளிப்படுத்தி உரிமைகளை நிலைநாட்ட முடியும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here