NCERP அறிக்கையின்படி, இந்தியாவின் வறுமை 2011-2012ல் 21 சதவீதத்திலிருந்து 8.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதைப் பற்றிய செய்தி தொகுப்பைப் பாருங்கள்.
மோடி 2.0 ஆட்சியின் கடைசி பட்ஜெட் கூட்டத்தொடரில் உரையாற்றிய ஜனாதிபதி திரௌபதி முர்மு, கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடிக்கும் அதிகமான மக்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர் என்றார்.
இது ஒவ்வொரு ஏழைக்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் ஒன்று என்றும் அவர் கூறினார்.
இந்நிலையில் என்சிஏஇஆர் என்ற அமைப்பு சமீபத்தில் ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்திய மனித மேம்பாட்டு ஆய்வின் தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டதாக NCAER தெரிவித்துள்ளது.
டெண்டுல்கர் கமிட்டி இந்தியாவின் வறுமை விகிதத்தை பணவீக்க-சரிசெய்யப்பட்ட வறுமைக் கோட்டைப் பயன்படுத்தி மதிப்பிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன் படி, 2011-2012ல் 21 சதவீதமாக இருந்த இந்தியாவின் வறுமை விகிதம் 8.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இதில் 3.2 சதவீதம் பேர் வறுமையிலும், 5.3 சதவீதம் பேர் வாழ்க்கையில் எதிர்பாராத விபத்துக்களால் வறுமையிலும் தள்ளப்படுகிறார்கள்.
அறிக்கையின்படி, இந்தியாவில் கிராமப்புறங்களில் வறுமை 24.8 சதவீதத்தில் இருந்து 8.6 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 13.4 சதவீதத்தில் இருந்து 8.4 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
இந்தியாவின் நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பிவிஆர் சுப்ரமணியம் கருத்துப்படி, இந்திய புள்ளியியல் அலுவலகம் வழங்கிய குடும்ப நுகர்வு செலவுத் தரவுகளின் அடிப்படையில் இந்தியாவில் வறுமை நிலை 5 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கலாம்.
NCAER அறிக்கை, பொது விநியோகத் திட்டத்தின் மூலம் மத்திய அரசால் அதிக உணவு மானியம் வழங்கப்படுவதாகவும், பல்வேறு நலத்திட்டங்கள் மூலம் மக்கள் அதிக பயன் பெறுவதாகவும், இதுவே இந்தியாவில் வறுமை விகிதம் குறைவதற்குக் காரணம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
10 ஆண்டுகளாக சமூக பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து வரும் மத்திய அரசு, ஏழை மக்களை பொருளாதாரத்தில் உயர்த்தும் நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவின் வறுமை வெகுவாக குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏழைகளின் சமூகக் கட்டமைப்பில் உரிய பாதுகாப்பு, அவர்களுக்கான பொருளாதார மேம்பாடு, அவர்களுக்கான நலத்திட்டங்கள் ஆகியவற்றில் முழுக் கவனம் செலுத்தி வரும் அரசு, இந்தியாவில் வறுமையை நிச்சயம் ஒழிக்க முடியும் என்று இந்த ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.