ராஜஸ்தானில் பா.ஜ.க.வை சேர்ந்த கிரோடி லால் மீனா எனக்கு சொன்ன வார்த்தை தான் முக்கியம் என்று கூறி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ராஜஸ்தானில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பஜன் லால் சர்மா முதல்வராக உள்ளார். பாஜக மூத்த தலைவர் கிரோடி லால் மீனா அவரது அமைச்சரவையில் அமைச்சராக பதவி வகித்தார். வேளாண்மை, தோட்டக்கலை, ஊரக வளர்ச்சி, நில மேலாண்மை, நிவாரணம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை நிர்வகித்தார்.
லோக்சபா தேர்தல் சமீபத்தில் நடந்தது. இந்த தேர்தலின் போது, மொத்தம் 7 தொகுதிகளில் கிரோடி லால் மீனா தீவிர பிரசாரம் செய்தார். இந்த பிரசாரத்தின் போது அவர் பேசுகையில், “நான் பிரச்சாரம் செய்த 7 தொகுதிகளிலும் பாஜக நிச்சயம் வெற்றி பெறும். இதில் ஏதாவது ஒரு தொகுதியில் பா.ஜ., தோல்வியடைந்தாலும், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வேன்,” என்றார்.
இந்த நிலையில் கடந்த மாதம் 4ம் தேதி மக்களவை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது கிரோடி லால் மீனாவுக்கு பேரிழப்பு காத்திருந்தது. ஏனெனில் அவர் பிரச்சாரம் செய்த தொகுதிகளில் 3ல் மட்டுமே பாஜக வெற்றி பெற்றது. கிரோடி லால் மீனாவின் சொந்த தொகுதியான தவ்சா உள்ளிட்ட 4 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
இதையடுத்து கிரோடி லால் மீனா மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார். அவர் தனது துறை அலுவலகங்களுக்கு செல்வதையும் தவிர்த்து வந்தார். இந்நிலையில், 4 தொகுதிகளில் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்பதாகவும், தனது வார்த்தைக்கு முக்கியத்துவம் இருப்பதாகவும் கூறி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் ஜிரோடி லால் மீனா.
அவர் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மாவிடம் கடிதம் கொடுத்துள்ளார். இதுகுறித்து கிரோடி லால் மீனாவின் உதவியாளர் கூறுகையில், “ கிரிடி லால் மீனா அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவர் 10 நாட்களுக்கு முன்பு முதல்வர் பஜன் லால் சர்மாவிடம் கடிதம் அளித்தார். எனினும், தற்போது வரை அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்பட்டுள்ளதா? அல்லது நிராகரிக்கப்பட்டதா? அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகவில்லை.
Discussion about this post