நாடாளுமன்றத்தில் உறுப்பினர் பேசும் போது யாரும் தலையிட வேண்டாம் என அனைத்துக் கட்சி கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகளை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ செய்தார்.
ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் கடமைப்பட்டுள்ளதால், உறுப்பினர் எழுந்து நின்று பேசும்போது யாரும் தொந்தரவு செய்ய வேண்டாம் என ராஜ்நாத் சிங் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் உரையை இரு அவைகளின் உறுப்பினர்களும் இடையூறு செய்ததைக் குறிப்பிட்டு, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இந்த உத்தரவை வழங்கியதாகக் கூறினார்.