ஒவ்வொரு ஆண்டும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் பீகார், அசாம், உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
பிரதம மந்திரி கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ் 25,000 கிராமங்களில் அனைத்து வானிலை சாலைகளும் அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் கூறினார்.
மழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு ரூ.11,500 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்றும், நிலச்சரிவு மற்றும் மேக வெடிப்புகள் அதிகம் உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.