விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்தார்.
அப்போது பேசிய அவர், அடுத்த 2 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளுக்கு இயற்கை விவசாயம் செய்ய பயிற்சி அளிக்கப்படும் என்றார். கடுகு, நிலக்கடலை, சூரியகாந்தி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
விவசாயத்தில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
வேளாண் பொருட்கள் தொடர்பான கணக்கெடுப்பு டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் என்றும், வேளாண் துறைக்கு 1.52 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.