டெல்லியில் ஐஏஎஸ் தேர்வு மையத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 பேரையும் 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில் ஐஏஎஸ் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு, 5 பேர் டெல்லி டீஸ் ஹசாரி நீதிமன்றத்தில் முதற்கட்டமாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், மாணவர்களின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, பழைய ராஜேந்தர் நகரில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.