வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவுவதாக அமித்ஷா உறுதியளித்தார். இதற்கிடையில், விமானப்படை அனுப்பிய இரண்டு அதிநவீன ஹெலிகாப்டர்கள் மீட்புப் பணிகளுக்காக வயநாடு வந்தடைந்தன.