சென்னையில் மழை தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு… மத்திய அமைச்சர் நித்யானந்த்

0

15வது நிதி கமிஷன் பரிந்துரையின்படி, சென்னையில் மழை தடுப்பு பணிகளுக்கு மத்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

இதற்கு மக்களவையில் அவர் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில்,

மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.500 கோடியும், அகமதாபாத், பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களுக்கு தலா ரூ.250 கோடியும் ஒதுக்கீடு செய்ய 15வது நிதிக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மாநில அரசும் 10 சதவீதம் பங்களிப்பதாக தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சர் நித்யானந்த் ராய், சென்னை வெள்ளத்தடுப்பு பணிக்கு மத்திய அரசு 561 கோடியே 29 லட்சம் ரூபாயை ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அதில் 500 கோடி ரூபாய் மத்திய அரசு சார்பில் வெளியிடப்படும்.

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பான கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் நித்யானந்த் ராய், அதன் நிலப்பரப்பு, நிர்வாகம் மற்றும் நிதி அமைப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, தற்போதைய மத்திய பிரதேச அந்தஸ்தை தொடர வேண்டும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here