வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்திய விசா மையங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்….

0

வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்திய விசா மையங்களும் மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சி நடைபெற்று வந்தது. இதற்கிடையில், நாட்டின் விடுதலைப் போரில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு அரசு வேலைகளில் 30 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் வெடித்தது. போராட்டம் தீவிரமடைந்ததால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் முகமது சஹாபுதீன் உத்தரவிட்டார். இதையடுத்து, இடைக்கால அரசின் தலைவராக முகமது யூனுஸை நியமிப்பதாக ஜனாதிபதி அறிவித்தார். இதையடுத்து, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு இன்று பதவியேற்கும் என வங்கதேச ராணுவ தளபதி வக்கார்-உஸ்-ஜமான் தெரிவித்தார். ஷேக் ஹசீனா பதவியில் இருந்து வெளியேறிய பிறகும், அங்கு நிலைமை மோசமாக உள்ளது. தற்போது, ​​அங்கு செயல்படும் அரசு இல்லாததை சிலர் சாதகமாக பயன்படுத்தி சிறுபான்மை இந்துக்களைக் குறிவைத்து வருகின்றனர்.

இந்நிலையில், வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்திய விசா மையங்களும் காலவரையின்றி மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, அகில இந்திய விசா விண்ணப்ப மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வங்கதேசத்தில் நிலவும் நிலையற்ற சூழ்நிலை காரணமாக, அங்குள்ள அகில இந்திய விசா விண்ணப்ப மையங்கள் (IVAC) மறு அறிவிப்பு வரும் வரை மூடப்பட்டிருக்கும். விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த விண்ணப்ப தேதி அறிவிக்கப்படும். எஸ்எம்எஸ் மூலம் அடுத்த வேலை நாளில் அவர்கள் பாஸ்போர்ட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here