2047 வருடத்திற்குள் இந்தியா வல்லரசு ஆகும்…. சர்வதேச நிதிய துணை மேலாண் இயக்குநர் கீதா கோபிநாத்

0

2047ல் வல்லரசாக இந்தியா என்ன செய்ய வேண்டும்? இது தொடர்பாக ஐஎம்எஃப் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் பேசினார்.

டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநரும், ஹார்வர்டு பல்கலைக்கழக பேராசிரியருமான கீதா கோபிநாத் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

இந்தியா வேகமாக வளரும் பொருளாதாரம். இந்த வேகத்தை நீண்ட காலத்திற்கு எவ்வாறு தக்கவைப்பது என்பதுதான் இப்போதைய கேள்வி.

இந்தியாவிற்கு மிகவும் திறமையான மற்றும் படித்த பணியாளர்கள் தேவை. இந்தியாவை அதிக வருமானம் பெறும் பொருளாதாரத்தை நோக்கி அழைத்துச் செல்ல இது மிகவும் முக்கியமானது.

இந்தியாவின் வளர்ச்சி என்பது மூலதனத்தில் தங்கியுள்ளது. ஆனால் காலியிடங்கள் மிகவும் குறைவாகவே நிரப்பப்படுகின்றன. மனித மூலதனம் மற்றும் திறமையான தொழிலாளர்களில் இந்தியாவுக்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது.

2047ல் இந்தியா வல்லரசு ஆக 2030க்குள் 6 கோடி முதல் 14.8 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.பெண் தொழிலாளர்களின் பங்களிப்பையும் அதிகரிக்க வேண்டும். பொது உள்கட்டமைப்பில் அதிக முதலீடுகள் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு கீதா கோபிநாத் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here