வயநாடு அருகே காணாமல் போனவர்களை தேடி வந்த தீயணைப்பு துறையினர், நான்கு லட்சம் ரூபாயை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். காணாமல் போன நூற்றுக்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
சூரல்மலை பகுதியில் உள்ள வேலர்மலை பள்ளிக்கு பின்புறம் உள்ள ஆற்றில் பிளாஸ்டிக் சுற்றப்பட்ட நான்கு லட்சம் ரூபாயை தீயணைப்பு துறையினர் மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.