லண்டனில் ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்ணை தாக்கிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஏர் இந்தியா விமானப் பணிப்பெண்கள் லண்டனில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்கியிருந்தபோது, நள்ளிரவில் மர்ம ஆசாமி ஒருவர் உள்ளே புகுந்து பணிப்பெண் ஒருவரை சுத்தியலால் தாக்கினார்.
காயமடைந்த பெண் சிகிச்சைக்கு பின் இந்தியா கொண்டு வரப்பட்டார். இதனிடையே, லண்டன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தாக்கிய மர்மநபரை தேடி வருகின்றனர்.