மதுக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் மீண்டும் நீட்டிப்பு…

0

மதுக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்றக் காவல் செப்டம்பர் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை மீறல் வழக்கில் கெஜ்ரிவால் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் வீடியோ மூலம் ஆஜர்படுத்தப்பட்டார். மதுபானக் கொள்கை ஊழலில் கிடைத்த பணத்தில் ஆம் ஆத்மி கட்சி கோவா சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதாக சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

அந்த வகையில், கோவாவில் உள்ள 40 தொகுதிகளிலும் வேட்பாளருக்கு தலா ரூ.90 லட்சம் கொடுத்துள்ளதாகவும், இதற்கு சாக்குப்போக்கு இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3-ஆம் தேதி வரை நீட்டித்த நீதிபதி, அன்றைய தினம் கூடுதல் குற்றப்பத்திரிகை பரிசீலிக்கப்படும் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here