ஒரு சிலர் மீது குற்றம் சுமத்தி அனைவரையும் விமர்சிப்பது தவறு… நடிகர் மோகன்லால்

0

மலையாள நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதாக வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கையை நடிகர் மோகன்லால் வரவேற்றுள்ளார்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தை யாரும் அழிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.

ஹேமா கமிட்டி அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது சரியான முடிவு என்று கூறிய மோகன்லால், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் கடுமையாக உழைக்கும் அமைப்பு என்றும் கூறினார்.

ஒரு சிலர் மீது குற்றம் சுமத்தி அனைவரையும் விமர்சிப்பது தவறு என்றும், தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் நடிகர் மோகன்லால் வலியுறுத்தியுள்ளார்.
இளம் நடிகர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து பரிசீலித்து வருவதாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here