திமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருகிறது.. வானதி சீனிவாசன்

0

திமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதாக பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோடை வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க சென்னை பட்டினப்பாக்கத்தில் பாஜக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

பாஜக தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி சீனிவாசன் இதில் பங்கேற்று தண்ணீர் பந்தலைத் திறந்து வைத்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல் மாற்றத்திற்கான அனைத்துப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், திமுக அரசு மக்களின் நம்பிக்கையை இழந்து வருவதாகவும் கூறினார்.

மேலும், தமிழக அமைச்சர்கள் மீதான குற்ற வழக்குகளை சுட்டிக்காட்டிய வானதி சீனிவாசன், முதல்வர் ஸ்டாலின் ஏன் இன்னும் அவர்களை பதவியில் வைத்திருக்கிறார் என்று கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here