குடியரசுத் தலைவர் உரையில் மக்கள் பிரச்னைகள் வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், மதத்தின் அடிப்படையில் பிரிவினையை ராகுல் காந்தி பேசுவதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி விமர்சித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்ட பாஜக அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் முடிவுகள் மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் பங்கேற்றுவிட்டு நாராயணன் திருப்பதி செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது: சனாதன தர்மத்தை அழித்து விடுவேன் என உதயநிதி ஸ்டாலின் இந்து மதம் பற்றி பேசுகிறார், அதை அறியாமல் ராகுல் காந்தி இந்து மதத்தை பற்றி பேசுவது நல்லதல்ல.