உதயநிதியின் தனிப்பட்ட ஆசைக்கு தமிழக மக்களை வற்புறுத்த முடியாது… அண்ணாமலை

0

உதயநிதியின் தனிப்பட்ட ஆசைக்கு தமிழக மக்களை வற்புறுத்த முடியாது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் அறிக்கையில்,

ஊழலுக்குப் புதிய வழிகளைக் கண்டுபிடிப்பதிலும், ஊழலுக்குப் புதிய வழிகளை வகுத்துத் தருவதிலும் திமுக தொடர்ந்து முன்னணியில் உள்ளது.

கடந்த காலங்களில் மருத்துவ சேர்க்கைக்கு மாணவர்களின் தகுதி பட்டியல் வழங்கி கட்சிக்கு நன்கொடை வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்திய திமுக, தற்போது நன்கொடை வசூலில் உச்சத்தை தொட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் (TNPCB) சில மாதங்களுக்கு முன், சென்னை மற்றும் மேற்கு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த பெரும்பாலான தொழில் முனைவோர்களிடம் இருந்து F4 மோட்டார் பந்தயத் திட்டத்துக்கான நிதி சேகரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது.

நிதி வழங்காவிட்டால், தொழில்முனைவோரை பிரச்னைகளை சந்திக்கும்படி வற்புறுத்துகின்றனர். கோபாலபுர இளவரசர் உதயநிதி ஸ்டாலினின் கனவுத் திட்டமான எஃப்4 பந்தயப் போட்டி கடந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தது, ஆனால், பின்னர் ஒத்திவைக்கப்பட்டு அடுத்த மாதம் சென்னையில் நடைபெறவுள்ளது.

இதற்காக, தமிழக அரசு, 40 கோடி ரூபாய் செலவிட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் மோட்டார் பந்தயக் கனவுகளை நனவாக்க தமிழகத்தில் உள்ள அனைத்து சிறு தொழில் அதிபர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் நிதி அளிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

ஒவ்வொரு நிறுவனங்களிடமிருந்தும் ₹25,000 முதல் ₹1,00,00,000 வரை வசூலிக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பணிக்கப்பட்டுள்ளனர். “ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” என்ற நிறுவனத்தின் பெயரில் இந்த நிதி வழங்கப்படுகிறது.

அவர்கள் கேட்ட நிதியை வழங்காவிட்டால், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் நடவடிக்கையை அந்த நிறுவனம் கண்டிப்பாக சந்திக்க நேரிடும்.

“ரேசிங் ப்ரோமோஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்” நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் கோபாலபுர இளவரசரின் நெருங்கிய நண்பரான அகிலேஷ் ரெட்டி என்பது தற்செயல் நிகழ்வு அல்ல.

இந்த நிறுவனத்தின் வருமானம் மற்றும் நிதிநிலை அறிக்கையை வெளியிட வேண்டும் என்று தமிழக பாஜக சார்பில் வலியுறுத்துகிறேன். மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை திமுக அரசு எப்படி கொள்ளையடிக்கிறது என்பதை தமிழக மக்களும் தெரிந்து கொள்ளட்டும்.

உதயநிதியின் ஸ்டாலினுக்கு தமிழக மக்களை வற்புறுத்த முடியாது என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here