கோவையில் துரித உணவுக்கடைகள் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

0

கோவையில் துரித உணவுக்கடைகள் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம்

கோவை மாவட்டத்தில் உள்ள துரித உணவுக் கடைகளின் உரிமையாளர்களை கலந்து கொண்ட ஆலோசனைச் சந்திப்பு, கோவையில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த சந்திப்பின்போது, பாதுகாப்பான முறையில் மயோனைஸ் தயாரிக்க தேவையான நடைமுறைகள் குறித்து உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் விளக்கங்களை வழங்கினர்.

இந்தக் கூட்டத்தில், கோவை மாவட்ட நியமன அலுவலரான டாக்டர் அனுராதா தலைமை வகித்து உரையாற்றியபோது, “தமிழ்நாட்டில் பச்சை முட்டைகளை பயன்படுத்தி தயாரிக்கப்படும் மயோனைஸ்க்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. கெட்டுப்போன முட்டைகளை கொண்டு தயாரிக்கப்படும் மயோனைஸ் உணவுகளை பயன்படுத்தினால், உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

சைவ முறையில் தயாரிக்கப்படும் மயோனைஸ், மற்றும் புதிய முட்டைகளை 15 முதல் 20 நிமிடங்கள் வரை சுட வைத்த பிறகு, அதன் வெள்ளை பகுதியை பிரித்து மயோனைஸ் தயாரிக்கலாம்.

உணவு தயாரிப்பில் சுத்தமும் சுகாதாரமும் மிக முக்கியம். பழைய உணவுப்பொருட்களை குளிர்பதனப் பெட்டியில் வைத்து மறுநாள் பயன்படுத்துவது தவறானது. தரச்சான்று பெற்ற பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். மேலும், உணவு தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் நல்ல பார்வைத் திறனுடன் இருக்க வேண்டும். அனைத்து விதிமுறைகளும் கடைபிடிக்கப்பட வேண்டும்,” எனத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here