மும்பை நகரத்தைச் சேர்ந்த ஒரு ஆட்டோ டிரைவர், தனது ஆட்டோவை இயக்காமல் இருந்தபடியே மாதம் ரூ.5 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரை வருமானம் ஈட்டுகிறாரெனும் ஒரு பதிவு, இணையத்தில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து லென்ஸ்கார்ட் நிறுவனத்தின் உயரதிகாரியான ராகுல் ரூபானி, தனது லிங்க்ட்இன் பக்கத்தில் பகிர்ந்த அனுபவத்தில், “இந்த வாரம் விசா தொடர்பான வேலைக்காக நான் அமெரிக்க தூதரகத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு பாதுகாப்பு அலுவலர்கள், என் பையை உள்ளே எடுத்துச் செல்ல முடியாது என கூறினார்கள். பை வைக்க எந்த லாக்கரும் அங்கு இல்லை.
நான் தயக்கம் நிறைந்த நிலையில் நின்றுக்கொண்டிருந்தபோது, அருகிலிருந்த ஒரு ஆட்டோ டிரைவர் எனக்காக கைகாட்டி, “பையை எனக்கு கொடுங்கள், நன்கு பாதுகாப்பாக வைத்திருக்கிறேன்,” என்றார். ஆனால் அதற்காக ரூ.1000 கட்டணமாகத் தேவைப்படும் என்றார். ஆரம்பத்தில் கொடுக்க தயங்கினேன். ஆனால் பிறகு வேறு வழியின்றி பையை அவரிடம் கொடுத்துவிட்டு, என் வேலைக்கு சென்றேன். பின்னர் தான் புரிந்தது – இது மிகச் சிறந்த வணிக யோசனை!
அந்த ஓட்டுநர், ஆட்டோ ஓட்டாமலேயே அதைப் பயன்படுத்தி வருமானம் ஈட்டுகிறார். மேலும், அதிகமான பயணிகள் அல்லது சந்தாதாரர்கள் பைகள் வைத்துவைக்க வந்தால், பாதுகாப்பாக வைக்க ஒரு காவலருடன் ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறார். அவர் பைகளை பொறுப்புடன் கையாள்கிறார்” எனக் கூறியுள்ளார்.
இந்த பதிவு சமூக வலைதளங்களில் பலவிதமான பின்னூட்டங்களை பெற்றுள்ளது.
ஒருவர் பதிவிட்டதாவது, “இது அந்த டிரைவரின் முழு வருமானம் அல்ல. அவரது வருமானத்தில், பாதுகாப்பு அமல்துறையினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும் என நினைக்கிறேன். மேலும், தூதரகத்திற்குள் ரூ.500க்கு லாக்கர் வசதி இருப்பதை அவருக்கு தெரியவில்லையோ என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.