‘அகண்டா 2’ திரைப்பட முடிவில் மூன்றாம் பாகத்திற்கு வழிகாட்டும் காட்சி இடம் பெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
போயப்பட்டி சீனுவின் இயக்கத்தில், நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா நடித்த ‘அகண்டா’ திரைப்படம் வெளியாகி, அதில் இடம்பெற்ற மாஸ் காட்சிகளும், தக்க வசனங்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன. இதனால், இப்படம் பாக்ஸ் ஆபிஸில் சிறந்த வெற்றியைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக தற்போது ‘அகண்டா 2’ உருவாகி வருகிறது.
செப்டம்பர் 25 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள ‘அகண்டா 2’ திரைப்படம் மீது ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த படத்தின் விநியோக உரிமைகள், ஓடிடி மற்றும் தொலைக்காட்சி உரிமைகளுக்காக தயாரிப்பு நிறுவனம் மிகப்பெரிய தொகையை கோரியுள்ளது. இதனை வாங்குவதற்காக பல நிறுவனங்கள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில், ‘அகண்டா 2’ படத்தின் இறுதியில் மூன்றாம் பாகத்திற்கான முன்னோட்டம் சேர்க்கப்பட்டிருக்கும் என தகவல்கள் கூறுகின்றன. ஆனால், ‘அகண்டா 3’ பற்றிய எந்தவொரு அதிகாரபூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை. இரண்டாம் பாகத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளின் போது, மூன்றாம் பாகம் தொடர்பான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.